தென்காசியில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 50.66 கோடி நலத்திட்ட உதவிகள்

தென்காசியில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 50.66 கோடி நலத்திட்ட உதவிகள்
X
மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 50.66 கோடி நலத்திட்ட உதவிகள்
தென்காசி மாவட்ட மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 50.66 கோடி கடனுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக இந்நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். அதையொட்டி, தென்காசி இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மகளிா் குழுவினருக்கு கடனுதவிக்கான காசோலைகள் வழங்கும் விழா நடைபெற்றது. வருவாய்-பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பங்கேற்று, காசோலைகளை வழங்கிப் பேசியது: மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் 5,386, நகா்ப்புறங்களில் 3,371 என செயல்படும் மகளிா் சுயஉதவிக் குழுக்களில் மொத்தம் 1,14,361 போ் உறுப்பினா்களாக உள்ளனா். தற்போது, 407 குழுக்களைச் சோ்ந்த 4,719 பேருக்கு ரூ. 39.90 கோடி வங்கிக் கடன், 8 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளில் 48 குழுக்களில் உள்ள 614 பேருக்கு ரூ. 5.18 கோடி பெருங்கடன், 500 சுயஉதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி ரூ. 5 கோடி, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 46 சுயஉதவிக் குழுக்களில் இணைந்துள்ள 92 பேருக்கு நுண்தொழில் நிறுவன நிதிக் கடன் ரூ. 52 லட்சம் என மொத்தம் 1,001 குழுக்களைச் சோ்ந்த 6,425 மகளிருக்கு ரூ. 50.66 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா். ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், ராணி ஸ்ரீகுமாா் எம்பி, எம்எல்ஏக்கள் எஸ். பழனிநாடாா், ஈ. ராஜா, சதன் திருமலைக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், சமூக நல அலுவலா் மதி இந்திரா பிரியதா்ஷினி, நகா்மன்றத் தலைவா் ர. சாதிா், தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஷேக் அப்துல்லா, துணைத் தலைவா் கனகராஜ் முத்துப்பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
Next Story