திருத்தணி ரயில் நிலையத்தில் 510 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

X

ரயில் நிலையத்தில் 510 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!
அரக்கோணம் ரயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திருத்தணி ரயில் நிலையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள் மற்றும் ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்கும் விதமாக அரக்கோணம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் பிளாட்பாரங்களிலும், ரயில்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.இந்தநிலையில் நேற்று மாலை சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 1-வது பிளாட்பாரம் அருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்த 17 மூட்டைகளில் 510 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை சிறப்பு பறக்கும் படை தாசில்தார் ரவியிடம் ஒப்படைத்தனர். மேலும், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story