ராணிப்பேட்டையில் 53 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்!

X
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் மையத்தின் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் 19 முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை நேரடியாக தேர்வு செய்தனர். முகாமில் 250-க்கும் மேற்பட்ட வேலை நாடுனர்கள் கலந்து கொண்டனர். இதில் 53 நபர்களுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவிதா வழங்கினார். இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ்பாபு மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

