ஆரணியில் ரூ.5.41கோடி மதிப்பில் தார் சாலை பணி துவக்கம். அடிக்கல் நாட்டினார் ஆரணி எம்.பி - எம் எஸ்.தரணிவேந்தன்.

ஆரணியில் ரூ.5.41கோடி மதிப்பில் தார் சாலை பணி துவக்கம். அடிக்கல் நாட்டினார் ஆரணி எம்.பி - எம் எஸ்.தரணிவேந்தன்.
ஆரணி செப் 20: ஆரணியில் ரூ.5.41கோடி மதிப்பில் தார் சாலை பணி துவக்க அடிக்கல் ஆரணி எம்.பி-எம்.எஸ்.தரணிவேந்தன் அடிக்கல் நாட்டினார்.
ஆரணியில் ரூ.5.41கோடி மதிப்பில் தார் சாலை பணி துவக்க அடிக்கல் ஆரணி எம்.பி-எம்.எஸ்.தரணிவேந்தன் அடிக்கல் நாட்டினார். பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ஆரணி அடுத்த ஆதனூர் கிராமத்தில் 2.89 கோடி ரூபாய் மதிப்பிலும். அரையாளம் கிராமத்தில் 2.52கோடி ரூபாய் மதிப்பிலும் ஆக 5.41கோடி மதிப்பில் தார் சாலை பணிகள் துவக்குவதற்காக பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தார் சாலை பணிகள் துவக்கிட அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம், திமுக தொகுதி பொறுப்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கனிமொழி சுந்தர், பச்சியம்மாள் சீனிவாசன், நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி, மாவட்ட துணைசெயலாளர் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் எம்.சுந்தர், எஸ்.மோகன், துரைமாமது, ஒன்றியக்குழு துணைத்தலைவர் கே.டி.ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் அருணாகுமரரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ராமன், ராஜேஸ்வரி, ஸ்ரீதர், தசரதராமன் உள்ளிட்டோர் உள்ளனர்.
Next Story