ராசிபுரம் அருகே 550 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது.கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல்..

ராசிபுரம் அருகே 550 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது.கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல்..
ராசிபுரம் அருகே 550 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது.கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பாளையம் அருகே நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இனமாக கார் ஒன்று சுற்றி தெரிவதை அறிந்த அதிகாரிகள் காரை பின் தொடர்ந்து சென்றனர். அப்போது காரில் 550 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்ததை அடுத்து காரை ஓட்டிச் சென்ற ராசிபுரம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ்(49) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல்வேறு வீடுகளில் இருந்து அதிக விலைக்கு ரேஷன் அரிசிகளை வாங்கிக் கொண்டு வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக அளவில் விற்பனை செய்வதற்காக கடத்திச் சென்றதாக தெரியவந்தது.இதனை அடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாட்டா சுமோ கார் மற்றும் 550 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்..
Next Story