பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

X
விருதுநகரில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழக முழுவதும் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினத்தை அதிமுகவினர் அனுசரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் விஜயகுமாரன் தலைமையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள அண்ணாவின் திரு உருவ சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் வெங்கடேஷ் ஒன்றிய கழகச் செயலாளர்கள் தர்மலிங்கம் மச்ச ராஜா கண்ணன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
Next Story

