ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 567 மனுக்கள் பொதுமக்களிடம் எம் எல் ஏ பெற்றார்

ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 567 மனுக்கள் பொதுமக்களிடம் எம் எல் ஏ பெற்றார்
X
ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 567 மனுக்கள் பொதுமக்களிடம் எம் எல் ஏ க.சொ.க. கண்ணன் பெற்றார்
ஜெயங்கொண்டம் ஆக.15- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில்,1, 2, 11 ஆகிய வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமினை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் பார்வையிட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பொதுமக்களிடம் 567 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, வட்டாட்சியர் சம்பத், நகராட்சி தலைவர் சுமதி சிவகுமார், துணைத்தலைவர் வெ.கொ.கருணாநிதி, நகராட்சி ஆணையர் அசோக்குமார், மேலாளர் அன்புச்செல்வி, பொறியாளர் ராஜகோபாலன் மற்றும் பல்துறை அரசு அலுவலர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள் தங்கப்பாண்டியன், வெற்றிவேலன், சுப்பிரமணியன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story