உலக போராளி சேகுவேரா அவர்களின் 57 வது ஆண்டு நினைவு நாள்..

உலக  போராளி சேகுவேரா அவர்களின் 57 வது ஆண்டு நினைவு நாள்..
உலக போராளி சேகுவேரா அவர்களின் 57 வது ஆண்டு நினைவு நாள்..
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, அடக்கு முறைக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய உலக போராளி சேகுவேரா அவர்களின் 57 வது ஆண்டு நினைவு நாளையொட்டி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ராசிபுரம் நகர ஒன்றிய குழு மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எஸ்.மணிமாறன் அவர்களின் தலைமையில் சேகுவேரா அவர்களின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி முழக்கங்கள் எழுப்பி செவ்வணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.மீனா, திராவிடர் விடுதலைக் கழகத்தின் நகர செயலாளர் பிடல் சேகுவேரா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர துணைச் செயலாளர்கள் A.சாதிக், A.கிருஷ்ணமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர பொருளாளர் P.சலீம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் A.C.ராஜா, N.பயாஸ் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
Next Story