விவசாய தோட்டத்தில் புகுந்து நாய்கள் கடித்து குதறியதில் 6 மாத கன்று குட்டி பரிதாபமாக உயிரிழப்பு.

நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
பல்லடத்தை அடுத்த அவிநாசிபாளையம் ராமம்பாளத்தைச் சேர்ந்தவர் யுவராஜ். விவசாயம் செய்து வருகிறார்.இவரது தோட்டத்தில் கால்நடைகளையும் வளர்த்து வருகின்றார். இந்நிலையில் இன்று காலை இவரது தோட்டத்திற்குள் புகுந்த ஐந்து நாய்கள் கடித்து குதறியதில் ஆறு மாத கன்று குட்டி பரிதாபமாக உயிரிழந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகின்றது.இதனை அடுத்து நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story