ஆரணி அருகே மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகள் பறிமுதல்.
ஆரணி அடுத்த மோட்டூர் ஆற்றுப்படுகையில் இருந்து 6 மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதாக ஆரணி கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்ததின்பேரில் ஆரணி கிராமிய போலீஸார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சேத்துப்பட்டு சாலையில் நெசல் பகுதியில் 6 மாட்டு வண்டிகள் சென்றதை வழிமறித்து மடக்கி பிடித்தனர். அப்போது மாட்டு வண்டி உரிமையாளர்கள் அனைவருக்கு மாட்டுவண்டியை அதே இடத்தில் விட்டு தப்பி ஓடினர். அனைத்து மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து ஆரணி கிராமிய காவல் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர். பின்னர் விசாரணை நடத்தியதில் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் பெருமாள்(30), சக்திவேல்(35), வெங்டேசன் மகன் திருமூர்த்தி(25), சக்திவேல் மகன் கர்ணன்(22), சக்திவேல்(45), முனுசாமி மகன் கோவிந்தராஜ்(35) ஆகியோர் கடத்திச்சென்றது தெரியவந்தது. பின்னர் அனைத்து மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்து கிராமிய காவல் நிலையத்திற்கு எடுத்துச்சென்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Next Story




