நாமகிரிப்பேட்டை  அருகே மர்ம விலங்கு கடித்து, 6 ஆடுகள் கன்று குட்டி  ஒன்றும் பலியானது.

நாமகிரிப்பேட்டை  அருகே மர்ம விலங்கு கடித்து, 6 ஆடுகள் கன்று குட்டி  ஒன்றும் பலியானது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து வெள்ளக்கல்பட்டி அடுத்த பசிறுமலை அடிவாரப்பகுதியை சேர்ந்தவர் செல்வம், 60. இவர் இப்பகுதியில் விவசாய நிலத்தில், 10க்கும் மேற்பட்ட ஆடுகள், மாடு, கன்றுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் மதியம் மாட்டு கொட்டகையில் ஆடு, மாடுகளை கட்டிவைத்துவிட்டு சொந்த வேலைக்காக ராசிபுரம் சென்றுவிட்டார். மாலை திரும்பி வந்து பார்த்த போது மாட்டுக்கொட்டாயில் இருந்த, 6 ஆடுகள், கன்று குட்டி ஆகியவை மர்ம விலங்குகள் கடித்து இறந்து கிடந்தன. ஆடுகள் கட்டிய இடத்தில் அப்படியே இறந்து கிடந்தன. நாய்கள் அல்லது பசிறு  மலையில்  இருந்து வந்த மர்ம விலங்குகள் கடித்து இறந்திருக்கலாம் என செல்வம் தெரிவித்தார். இறந்த ஆடுகள், கன்று குட்டிகளின் மொத்த மதிப்பு, 1 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
Next Story