அரக்கோணம்:ரயிலில் பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு!

X
சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாலசரஸ்வதி (வயது 60). இவர், தனது குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டு, சென்னை செல்லும் சத்ரபதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஊருக்கு புறப்பட்டார். ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் 5-வது பிளாட்பாரத்தில் வந்து நின்று புறப்பட்டபோது, அதே பெட்டியில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென பாலசரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு, ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து பாலசரஸ்வதி அரக்கோணம் ரயில்வே காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.
Next Story

