ஜெயங்கொண்டத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் ஆக 6-ல் ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது : பங்கேற்க உள்ளார் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா சி சிவசங்கர்

ஜெயங்கொண்டத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் ஆக 6-ல் ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது : பங்கேற்க உள்ளார் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா சி சிவசங்கர்
X
ஜெயங்கொண்டத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது 6-ந் தேதி வழங்கப்படுகிறது.போக்குவரத்து மற்றும் மின்சார குறை அமைச்சர் சா சி சிவசங்கர் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
ஜெயங்கொண்டம், ஆக.30- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோரியம்பட்டி டி.எம்.டி. திருமண மண்டபத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன்ஸ் சங்கம், கல்வி துறையில் பணியாற்றி வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் 275 ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது வழங்கும் விழாவை அடுத்த மாதம் (செப்டம்பர்) 6-ந் தேதி நடத்துகிறது. இந்த விழா லயன்ஸ் சங்க மாவட்ட தலைவரும், பி.ஜி.ஆர். நகை மாளிகை உரிமையாளருமான ரமேஷ்குமார் தலைமையில் நடத்தப்பட உள்ளது. இதில் லயன்ஸ் மாவட்ட நிர்வாக அலுவலரும், கே.ஆர்.டி. டி.வி.எஸ். உரிமையாளரும், ஊர்க்காவல் படையின் திருச்சி சரக உதவி தளபதியுமான லயன் கே.ராஜன் வரவேற்புரையாற்றுகிறார். லயன்ஸ் மாவட்ட ஆளுநர் லயன் மணிவண்ணன் தொடக்க உரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் சிறப்பு விருந்தினராகவும், அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, பன்னாட்டு இயக்குனர் லயன் சீனிவாசன், க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ., மாவட்ட நெறியாளரான முன்னாள் ஆளுநர் லயன் முகமது ரபி ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது வழங்க உள்ளனர். ஜெயங்கொண்டம் சிறைத்துறை அலுவல் சாரா பார்வையாளரும், லயன்ஸ் சங்க மாவட்ட தலைவருமான ஆர்.கே.செல்வமணி, அன்னை தெரசா மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளரும், பரபிரம்மம் பவுண்டேசன் நிறுவனத் தலைவருமான முத்துக்குமார், ஜெயங்கொண்டம் லயன் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட கரூர் முதல் காரைக்கால் வரை உள்ள அனைத்து லயன் சங்கம், மாவட்டத்தில் உள்ள அனைத்து லயன் சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை செயலாண்மைக்குழு தலைவர் டாக்டர் லயன் கருப்பையா, செயலாளர் லயன் முருகானந்தம், பொருளாளர் லயன் சதாசிவம் செய்து வருகின்றனர்.
Next Story