ஆத்துப்பாளையம் அணையிலிருந்து 60 கன அடி நீரை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ திறந்து வைத்தார். பாசன விவசாயிகள் மகிழ்ச்சி.
Karur King 24x7 |10 Sep 2024 9:55 AM GMT
ஆத்துப்பாளையம் அணையிலிருந்து 60 கன அடி நீரை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ திறந்து வைத்தார். பாசன விவசாயிகள் மகிழ்ச்சி.
ஆத்துப்பாளையம் அணையிலிருந்து 60 கன அடி நீரை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ திறந்து வைத்தார். பாசன விவசாயிகள் மகிழ்ச்சி. கரூர் மாவட்டம், கார்வழி அருகில் ஆத்துப்பாளையத்தில், 600 ஏக்கர் பரப்பளவில், 1985ம் ஆண்டு அணை கட்டப்பட்டது. நொய்யல் ஆறு மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீர், ஆத்துப்பாளையம் அணைக்கு வருகிறது. இதன் மூலம் கரூர் மற்றும் க.பரமத்தி ஊராட்சிக்குட்பட்ட அஞ்சூர், துக்காச்சி, கார்வழி, தென்னிலை, முன்னுார், அத்திப்பாளையம், குப்பம், புன்னம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 19,480 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 26.90 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது நீர்மட்டம், 25.15அடியாக உள்ளது. நொய்யலில் இருந்து வரும் தண்ணீரின் உப்புத்தன்மை 627 டி.டி.எஸ் உள்ளது. நாள் ஒன்றுக்கு அணையின் தற்பொழுது உள்ள நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து ஆகியவற்றை கணக்கில் கொண்டு நொய்யல் பிரதான கால்வாயில் 60 கன அடி அளவில் நீரை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ திறந்து வைத்தார். இன்று திறக்கப்பட்டுள்ள நீர் டிசம்பர் 7 வரை திறக்கப்படும். 90 நாட்களில் முறைவைத்து நீர் திறக்கப்படுவதன் மூலம் புகளூர், மண்மங்கலம் வட்டத்தில் 19,480 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story