குமரி அம்மனுக்கு 60 நாட்கள் பானக்காரம் பூஜை

X
பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கோடை காலத்தில் வெப்பம் நீங்கி குளிர்ச்சியு ன் இருப்பதற்காக பகவதி அம்மன் கோவிலில் 'பானக்காரம்' என்ற குளிர்பானம் மாலை நேரத்தில் நிவேத்தியமாக படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பங்குனி, சித்திரை ஆகிய 2 மாதங்களும் தினமும் மாலை 4 மணிக்கு கோவில் நடை திறந்தவுடன் 'பானக் காரம்' நிவேத்தியமாக படைத்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பானக்காரம் என்பது எலுமிச்சை பழம், சர்க்கரை, ஏலம், சுக்கு, புளி ஆகியவற்றை தண்ணீரில் கரைத்து தயார் செய்வது ஆகும். இந்த பானக்காரத்தை கோடை காலத்தில் அருந்தினால் வெப்பம் நீங்கி குளிர்ச்சியாக இருக்கும். இந்த ஆண்டு பங்குனி மாத பிறப்பான இன்று (சனிக்கிழமை)முதல் 60 நாட்கள் தினமும் மாலை 4 மணிக்கு பகவதி அம்மனுக்கு பானக்காரம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை முடிந்ததும். அம்மனுக்கு படைக்கப்பட்ட பானக்காரம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படு கிறது. இதனை அருந்தினால் வெப்பம் சம்மந்தமான நோய்கள் வராது என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இதனால் இந்த பானக்காரம் பிரசாதத்தை வாங்கி குடிக்க கோவிலில் தினமும் மாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
Next Story

