அரியலூரில் தைபூசத்தை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியில் 600 காளைகள் மற்றும் 300 காளையர்கள் பங்கேற்பு.

X
அரியலூர், ஏப்.15- அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூர் கிராமத்தில் தை பூசத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்றது. இதில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, கள்ளக்குறிச்சி மதுரை புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகளும்,300 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இதனையடுத்து வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயற்சித்தனர். இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காமல் சீறி பாய்ந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு சேர், சில்வர் குவளை,தங்க காசு, வெள்ளி காசு, ரொக்கப் பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கபட்டன. இதனை காண பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அசம்பாவித சம்பங்களை தடுக்கும் வகையில் திருமானூர் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். காயமடைவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ துறை சார்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது
Next Story

