ரூபாய் 61.10 லட்சம் மதிப்பில் வேளாண் பொருட்கள் ஏலம் நடைபெற்றது.
ரூபாய் 61.10 லட்சம் மதிப்பில் வேளாண் பொருட்கள் ஏலம் நடைபெற்றது. நொய்யல் அருகே உள்ள சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் கொப்பரை தேங்காய், எள் ஆகியவை நேற்று ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர் அதில் 2006 தேங்காய்கள் விற்பனைக்கு வந்தது 93 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 47 ஆயிரத்து 297 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல கொப்பரை தேங்காய் 7,648 கிலோ விற்பனைக்கு வந்தது. 12,18,753 க்கு விற்பனையானது. மேலும் 32,058 கிலோ எடை உள்ள கருப்பு எள் 48,44,618- ரூபாய்க்கு விற்பனையானது. ஆக மொத்தம் 61,10,668 ரூபாய்க்கு வேளாண் பொருட்கள் ஏலம் போனது.
Next Story





