உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் பயனாளிகள் 612 நபர்களுக்கு ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்.பி கே.ஆர் என்.ராஜேஷ்குமார்.
NAMAKKAL KING 24X7 B |25 Sept 2025 6:03 PM ISTபாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , சேந்தமங்கலம் ஒன்றியம் மற்றும் சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற
உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் பயனாளிகள் 612 நபர்களுக்கு ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வசந்த மஹால் திருமண மண்டபத்தில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , மாவட்ட ஆட்சியர் தலைமையில், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி முன்னிலையில், சேந்தமங்கலம் ஒன்றியம், சேந்தமங்கலம் பேரூராட்சி மற்றும் காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் 612 பயனாளிகளுக்கு ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் 15.07.2025 அன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தொடங்கி வைத்தார்கள். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 24 நகர்ப்புற மற்றும் 15 ஊரகப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. மொத்தம் - 238 முகாம்கள் நகர்ப்புறம் 110, கிராமப்புறம் -118) நடத்திட திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரையும் (நகர்ப்புறம் -44, கிராமப்புறம் -58), 2-ம் கட்டமாக ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 14 வரையும் (நகர்ப்புறம் -36, கிராமப்புறம் -40) நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும், 3-ம் கட்டமாக செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 10 வரை 60 முகாம்கள் (நகர்ப்புறம் -30, கிராமப்புறம் -30) நடத்திட திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் நாளது வரை 214 முகாம்கள் நடத்தப்பட்டு, 93,004 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 63,591 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, சேந்தமங்கலம் ஒன்றியத்தில் 6 முகாம்கள், சேந்தமங்கலம் பேரூராட்சியில் 1 முகாம் மற்றும் காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சியில் 2 முகாம்கள் என 9 முகாம்கள் நடத்தப்பட்டு பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, இன்றைய தினம் 612 பயனாளிகளுக்கு ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மகளிர் விடியல் பயண திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியினை கொண்டாடும் வகையில் நடைபெறும் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” விழாவில், 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான “புதுமைப்பெண்” மற்றும் “தமிழ்ப் புதல்வன்” திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார்கள். அந்த வகையில் 2025-26ஆம் கல்வி ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் முதலாமாண்டு பயிலும் 5,272 மாணவியர்களும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 5,800 மாணவர்களும் என 11,072 மாணவ, மாணவியர்கள் ரூ.1,000 உதவித்தொகை பற்று வைக்கப்பட்டுள்ளது. மேலும், 6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் பயின்றவர்கள் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை, அறிவியில், செவிலியர் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி பயில்வதை ஊக்குவித்திட 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் விடுதி, புத்தகம், உணவு ஆகியவற்றின் கட்டணத்தினை அரசே செலுத்துகிறது. எனவே, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சிறப்பாக நடைபெற பணியாற்றி வரும் வருவாய்த்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மின்சார துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சிகள் துறை, ஊரக வளர்ச்சி முகமை, மாநகராட்சி, தொழிலாளர் நலத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை உள்ளிட்ட அனைத்து துறைச் சார்ந்த அலுவலர்களுக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்தார். தொடர்ந்து, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,14,400/- மதிப்பில் பேட்டரி வீல்சேர், சமூக நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.50,000/- மதிப்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதிர்வு தொகை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 34 பயனாளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அட்டை, வீட்டுவரி இரசீது, காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம் பேரூராட்சி சார்பில் 35 பயனாளிகளுக்கு புதிய சொத்துவரி விதிப்பு, குடிநீர் இணைப்பு, சொத்துவரி பெயர் மாற்றம் ஆணை, வருவாய்த்துறையின் சார்பில் ரூ.81,20,000/- மதிப்பில் 304 பயனாளிகளுக்கு இ-பட்டா, பட்டா மாறுதல் சான்று, மின்சார துறையின் சார்பில் 35 பயனாளிகளுக்கு புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம் ஆணை, தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 101 பயனாளிகளுக்கு ரூ.5,32,100/- மதிப்பில் புதிய பதிவு, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், விபத்து மரண நிதியுதவி, கூட்டுறவுத்துறையின் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.23,01,800/- மதிப்பில் வட்டியில்லா பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன், வட்ட வழங்கல் துறையின் சார்பில் 25 பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டைகள், சுகாதாரத்துறையின் சார்பில் 50 பயனாளிகளுக்கு முதலமைச்சர் விரிவான காப்பீடு அட்டைகள், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.90,736/- மதிப்பில் பவர்டில்லர் என மொத்தம் 612 பயனாளிகளுக்கு ரூ.1,12,09,036/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியர் ச.பிரபாகரன் (சமூக பாதுகாப்பு திட்டம்), உதவி ஆணையர் (தொழிலாளர் நல வாரியம்) இந்தியா, மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்திரி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் எஸ்.பத்மாவதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.கலைச்செல்வி உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Next Story



