கரூரில்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் 62 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்.
Karur King 24x7 |18 Aug 2024 7:09 AM GMT
கரூரில்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் 62 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்.
கரூரில்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் 62 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட லைட் ஹவுஸ் அமராவதி பாலம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல் திருமாவளவன் 62 வது பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று கட்சிக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர். கட்சியின் பொறியாளர் அணி மாநிலத் துணை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன் கொடியேற்றி வைத்து தொல்.திருமாவை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் மாநகர பொருளாளர் ரகுமான், மண்டல துணை செயலாளர் ராஜா என்ற மன்னன், மாநில வணிகர் அணி துணை செயலாளர் கண்மணி ராமச்சந்திரன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் மணிமாறன், சமூக ஊடக மையம் மாவட்ட அமைப்பாளர் ராச கிருபானந்த், மாவட்ட தொழிலாளர் விடுதலை முன்னணி துணை அமைப்பாளர் செல்வேஸ்வரன், பசுவை ஆகாஷ், கார்த்தி,அரசு ஐக்கிய பேரவையின் மாவட்ட துணை அமைப்பாளர் திவான்கான்,மாவட்ட வணிக அணி பொருளாளர் தமிழ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேருந்து மற்றும் ஆட்டோ பயணிகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story