மாட்டு கொட்டகையில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூபாய் 620 பறிமுதல்.

மாட்டு கொட்டகையில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூபாய் 620 பறிமுதல்.
மாட்டு கொட்டகையில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூபாய் 620 பறிமுதல். கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் செப்டம்பர் 1-ம் தேதி மாலை 6 மணி அளவில், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள குணசேகரன் என்பவரது மாட்டு கொட்டகையில் பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த தர்மராஜ்,கரூர், சின்ன காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன், கரூர் மாவட்டம், மண்மங்கலம், கிழக்கூர் பகுதியைச் சேர்ந்த மனோகர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து,அவர்கள் சூதாட பயன்படுத்தி 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 620-ஐ பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வாங்கல் காவல் துறையினர்.
Next Story