மாவட்ட எஸ்பியிடம் 64பேர் புகார் மனு!

X
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி புதன்கிழமையான இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்ற முகாமில், காவல் நிலையங்களில் புகார் அளித்த 2 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 62 மனுதாரர்கள் என மொத்தம் 64 மனுதாரர்கள் தங்கள் குறைகளை தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வாரந்தோறும் புதன்கிழமைகளில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நடைபெறும் முகாமில், காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
Next Story

