எல்ஐசி மதுரை கோட்ட அலுவலகத்தில் 68 வது இன்சூரன்ஸ் வார விழா*

எல்ஐசி மதுரை கோட்ட அலுவலகத்தில் 68 வது இன்சூரன்ஸ் வார விழா*
மதுரை வருமான வரி முதன்மை ஆணையர் சஞ்சய் ராய்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்
எல்ஐசி நிறுவனம் வருடம் தோறும் நிறுவன வருடமான 1956-யை நினைவு கூறும் வகையில் செப்டம்பர் மாதம் ஒரு வாரம் இன்சூரன்ஸ் வார விழா வாக கொண்டாடி மகிழ்கிறது. அந்த வகையில் மதுரை செல்லூர் பகுதியில் உள்ள எல்ஐசி தலைமை அலுவலகத்தில் 68 ஆவது இன்சூரன்ஸ் வார விழா கோட்ட மேலாளர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.வணிக மேலாளர் முத்தையன் வரவேற்புரை வழங்கினார் முதுநிலைக்கோட்டை மேலாளர் நாராயணன் 68 ஆண்டுகள் எல்ஐசி நிறுவனத்தின் வளர்ச்சி குறித்தும் பாரத தேசத்தின் வளர்ச்சிக்கு எல்ஐசியின் தொடர்ச்சியான பங்களிப்பினை பற்றியும் நடப்பு நிதியாண்டின் நிறுவனத்தின் வணிக வளர்ச்சி பற்றியும் நடப்பில் உள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டிய யுக்திகள் பற்றியும் நிறுவனத்திற்கு மதுரை கோட்டத்தின் சிறப்பான வணிக பங்களிப்பினை பற்றியும் விவரித்து எடுத்துக் கூறினார்.மதுரை வருமான வரிமுதன்மை ஆணையர் சஞ்சய் ராய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எல்ஐசியின் 68 ஆண்டுகால பணிகளை பாராட்டியதோடு எதிர்காலத்தில் நிறுவனத்தின் அத்தனை பணிகளும் சிறப்புர வாழ்த்தினார்.விழா ஏற்பாடுகள் செய்த கோட்ட விற்பனை மேலாளர் லூர்து செல்வக்குமார் நன்றியுரை கூறினார் மேலும் இந்நிகழ்வில் எல்ஐசி அதிகாரிகள் ஊழியர்கள் வளர்ச்சி அதிகாரிகள் முதன்மை ஆலோசகர்கள் முகவர்கள் மற்றும் பாலிசிதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story