கணக்குவேலம்பட்டியில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது. ரூபாய் 690 பறிமுதல்.
Karur King 24x7 |23 Sep 2024 11:07 AM GMT
கணக்குவேலம்பட்டியில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது. ரூபாய் 690 பறிமுதல்.
கணக்குவேலம்பட்டியில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது. ரூபாய் 690 பறிமுதல். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் செப்டம்பர் 22ஆம் தேதி மாலை 4 மணி அளவில், அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட கணக்குவேலம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகில் உள்ள மொட்டையாண்டி ஆண்டவர் கோவில் அருகே பணம் வைத்து சூது ஆடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கணக்குவேலம்பட்டியைச் சேர்ந்த பொன்ராஜ், சிவக்குமார், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் கண்ணன், அரவக்குறிச்சி தாலுகா, சீலநாயக்கனூரை சேர்ந்த மணி ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 690-யும் பறிமுதல் செய்தனர். பின்னர், நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
Next Story