திருடர்கள் என கருதி அடித்து உதைத்த 7 பேர் கைது

திருடர்கள் என கருதி அடித்து உதைத்த 7 பேர் கைது
கைது
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே கீரிப்பட்டி பேரூராட்சி புதுக்காலனியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது நண்பர்கள் ஆத்தூர் மந்தவெளி பகுதியை சேர்ந்த செல்வம், நரசிங்கபுரம் காந்திநகரை சேர்ந்த செல்வராஜ், ஜோதி நகரை சேர்ந்த லோகு ஆகிய 4 பேரும் மது போதையில் இருந்தனர். இவர்கள் மது அருந்தி விட்டு தம்மம்பட்டி நோக்கி வந்தனர். தகரபுதூர் புளியந்தோப்பு பகுதியில் பெட்ரோல் இல்லாமல் வண்டி நின்று விட்டது. இதனால் பிரபாகரன், செல்வராஜ் 2 பேரும் பெட்ரோல் வாங்க அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றனர். செல்வம், லோகு 2 பேரும் அங்கு இருந்தனர். அப்போது அப்பகுதி மக்கள் மோட்டார் சைக்கிள் திருட வந்தவர்கள் என கருதி 2 பேரையும் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீசார் 2 பேரையும் மீட்டனர். இதுதொடர்பான புகாரின்பேரில் அதே பகுதியை சேர்ந்த கவியரசன், சுரேஷ், கருப்புசாமி, மணிகண்டன், மூலப்புதுரை சேர்ந்த சந்திரன், மணி,பிரவீன் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்
Next Story