கள்ளச்சாராய வழக்கில் 7 பேருக்கு காவல் நீட்டிப்பு

கள்ளச்சாராய வழக்கில் 7 பேருக்கு காவல் நீட்டிப்பு
நீட்டிப்பு
கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில், 7 பேரின் நீதிமன்ற காவல் வரும் செப்., 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் இறந்தனர். இது தொடர்பாக 24 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களில் தாமோதரன், ஷாகுல் அமீது, ராமர், அய்யாசாமி, அரிமுத்து, தெய்வீகன், வேலு ஆகியோரின் நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்தது. இதனையடுத்து கடலுார் மத்திய சிறையில் உள்ள 7 பேரையும் காணொலி மூலம் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி ஸ்ரீராம் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அதனைத் தொடர்ந்து 7 பேருக்கும் வரும் 2ம் தேதிவரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story