சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில்
சேலம் கோர்ட்டில் தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பாப்பம்பாடி பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 29). இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந் தேதி 7 வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மனோகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் போலீசார் சார்பில் விரைவாக கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் வழக்கு விசாரணை முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக மனோகரனுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.
Next Story