சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை!
போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 7 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த கருவேல முத்து மகன் பெருமாள் (23) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த சுரேஷ் இன்று (20.09.2024) குற்றவாளியான பெருமாள் என்பவருக்கு 7 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண தொகையில் இருந்து ரூபாய் ஒரு லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்து, சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட செயல்பட்ட தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்
Next Story