அரசு அங்காடியில் 7.50 லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை

தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் 7.50 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் விற்பனை
தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேலம்,நாமக்கல், திருவண்ணாமலை, பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். நேற்று நடைபெற்ற பட்டுக்கூடு ஏலத்தில் ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.800-க்கும், குறைந்தபட்சமாக ரூ.330-க்கும், சராசரியாக ரூ.685.84-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்து 644 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
Next Story