வான்மழை-77 மனைவி நல வேட்பு நாள் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது

திரைப்பட நடிகர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது
பல்லடம் வனாலயத்தில், திருப்பூர் அழகு வள்ளி கலைக் குழுவின் கும்மி ஆட்டம் நிகழ்ச்சியுடன் வான்மழை-77 மனைவி நல வேட்பு நாள் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் தலைமை விருந்தினராக திரைப்பட நடிகர் சிவகுமார் கலந்துகொண்டு வேதாத்திரிய வாழ்க்கை நெறி குறித்து விளக்கவுரை வழங்கி, அவரது காணொளியை ஒளிபரப்பினார். இந்நிகழ்ச்சியில், செயல்தலைவர் பாலசுப்பிரமணியன்* அவர்கள் வரவேற்புரை வழங்கினார். செயலாளர் ஸ்கை.வே.சுந்தரராஜ் அவர்கள் உலக நலம் வேண்டி தவம் இயற்றினார். ஆன்மீகம் மற்றும் இலக்கியத்துறை இயக்குநர் வெ.அனந்தகிருஷ்ணன்* அவர்கள் நன்றியுரை வழங்கினார். இணைசெயலாளர் ஈஸ்வரமூர்த்தி* அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வில், வனம் புரவலர், ராம்ராஜ் காட்டன் நாகராஜன்,வனம் நிர்வாகிகள், இயக்குநர்கள், அறங்காவலர்கள், உலக சமுதாய சேவா சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story