நெய்வேலி: 77 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை வழங்குதல்

நெய்வேலி: 77 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை வழங்குதல்
X
நெய்வேலியில் 77 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதி பண்ருட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 2 ஆம் கட்டமாக 77 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நெய்வேலியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ 77 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார். உடன் அதிகாரிகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story