மதுரை மத்திய சிறையில் 78 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

சிறைவாசிகள் மூலமாக பேச்சுப்போட்டி ,நாடகம், போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு வழங்கப்பட்டது
மதுரை மத்திய சிறை மற்றும் பெண்கள் தனி சிறையில் சுதந்திர தின விழா கொடியேற்றத்துடன் இனிதே நடைபெற்றது மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் கொடியேற்றி சிறைவாசிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். மதுரை செந்தமிழ் கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி பெண்கள் தனி சிறையில் நடைபெற்றது. மதுரை மத்திய சிறையில் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் பட்டயச் சான்றிதழ் பெற்ற ஆறு சிறைவாசிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது சிறகை விரி வாசகர் வட்டம் மூலமாக சிறைவாசிகளுக்கு வாசிப்புத் திறனை அதிகப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற 27 சிறைவாசிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது முன்னாள் சிறைவாசிகளின் வாழ்வாதாரத்திற்காக சலவை எந்திரம் மற்றும் தையல் எந்திரம் நலத்திட்ட உதவிகளும் பிரிசன் மினிஸ்ட்ரி ஆப் இந்தியா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து வழங்கப்பட்டது. சிறைவாசிகள் மூலமாக பேச்சுப்போட்டி ,நாடகம், போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு வழங்கப்பட்டது. வைகை சுதந்திரப் பறவைகள் இசைக்குழு இன்னிசை கச்சேரியுடன் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவு பெற்றது
Next Story