சாலையில் திரிந்த 8 மாடுகள் பறிமுதல்

சாலையில் திரிந்த 8 மாடுகள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட மாடுகள்

காஞ்சிபுரத்தில் சாலையில் திரிந்த 8 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில், காந்தி ரோடு, காமராஜர் சாலை, ரயில்வே ரோடு, கலெக்டர் அலுவலகம் ஆகிய பகுதிகளில், சாலையிலேயே மாடுகள் படுத்தும், நின்று கொண்டும் வாகன ஓட்டிளுக்கு தொந்தரவு கொடுப்பது வழக்கமாக உள்ளது. மாடுகளின் உரிமையாளர்களும் அவற்றை தொழுவத்தில் கட்டி வைத்து பராமரிக்காமல் அவிழ்த்து விடுவதால், வாகன விபத்துகள் ஏற்படுகின்றன.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் சுற்றி திரியும் மாடுகளை, ஏற்கனவே இருமுறை பிடித்து கோசாலைகளில் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில், காஞ்சிபுரம் காமராஜர் சாலை, காந்தி ரோடு உள்ளிட்ட இடங்களில் சுற்றிய, எட்டு மாடுகளை, மாநகராட்சியின் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் பிடித்து கோசாலைகளில் நேற்று ஒப்படைத்தனர்.

மாடுகளின் உரிமையாளர்கள், அதிகாரிகளிடம் மாடுகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தபோதும், மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டன."

Tags

Next Story