சாலையை நடந்து கடக்கும் போது கார் மோதிய விபத்தில் 8 வயது சிறுவன் படுகாயம்

சாலையை நடந்து கடக்கும் போது கார் மோதிய விபத்தில் 8 வயது சிறுவன் படுகாயம்
குமாரபாளையத்தில் சாலையை நடந்து கடக்கும் போது கார் மோதிய விபத்தில் 8 வயது சிறுவன் படுகாயமடைந்தான்
திருப்பூர், சந்திராபுரம் பகுதியில் வசிப்பவர் சவுமியாதேவி, 40. இவரும், இவரது மகள்கள், 8  வயது மகன் தேவன் ஆகியோர் குமாரபாளையம் காவேரி நகர் பகுதியில் உள்ள தன் தாயார் வீட்டுக்கு வந்தனர். செப். 15 காலை 11:45 மணியளவில், காவேரி நகர், பத்ரகாளியம்மன் கோவில் அருகே, காவிரி ஆற்றில் குளித்து விட்டு தன் குழந்தைகளுடன் இடைப்பாடி சாலையை நடந்து கடந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த, மாருதி ஆம்னி கார் ஓட்டுனர், சிறுவன் தேவன் மீது மோதியதில், சிறுவன்  பலத்த காயமடைந்தான். இவனை திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இது குறித்து சவுமியாதேவி குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதன்படி விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர் , குமாரபாளையம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதி வார்டன் பிரதாப்பிரவீன், 19, என்பவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.
Next Story