இளம் பெண்ணை ஏமாற்றியவருக்கு 8 ஆண்டுகள் சிறை!

இளம் பெண்ணை ஏமாற்றியவருக்கு 8 ஆண்டுகள் சிறை!
குற்றச் செய்திகள்
புதுக்கோட்டையை அடுத்த குரும்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பால்சாமி (24). இவர் கடந்த 2020ம் ஆண்டு 23 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றினார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து பால்சாமியை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை புதுகை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ரஜினி. விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட பால்சாமிக்கு ஒரு பிரிவின்கீழ் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகையை கட்டத்தவறினால் மேலும் 2 மாதங்கள் சிறையும், மற்றொரு பிரிவின்கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.
Next Story