திருப்பத்தூரில் பெய்த கனமழையால் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த 8 ஏரிகள் நிரம்பி வழிந்தன!

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெய்த கனமழையால் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த 8 ஏரிகள் நிரம்பி வழிந்தன! பெரியவர்கள் முதல் சிறியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மீன்பிடித்து உற்சாகம் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரி குளங்கள் நிரம்பி வழிகின்றன. திருப்பத்தூர் மாவட்ட பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 49 ஏரிகள் உள்ளன இதில் திருப்பத்தூரில் உள்ள திருப்பத்தூர் பெரிய ஏரி, மடவாளம் ஏரி, மாடப்பள்ளி ஏரி, குறும்பேரி ஏரி, சிம்மனபுதூர் ஏரி, ஜடையனூர் ஏரி, பொம்மி குப்பம் ஏரி, ஏலகிரி ஏரி, உள்ளிட்ட எட்டு ஏரிகள் நிரம்பி வழிந்தன.. இந்த நிலையில் 112 ஹெக்டேர் கொள்ளளவு கொண்ட திருப்பத்தூர் பெரிய ஏரி மற்றும் மடவாளம் ஏரியில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்து ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரில் உற்சாகமாக சண்டை ஜிலேபி ஜப்பான் உள்ளிட்ட மீன் வகைகளை பிடித்து மகிழ்ந்தனர் வருகின்றனர்.
Next Story

