பணிகள் முடிந்து 8-வருடங்களாக திறக்காத கழிப்பறைகள்

X
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இந்திரா நகர் காலனி மக்களுக்கு சுகாதார வசதிக்காக கடந்த 2018-ஆம் ஆண்டு ஆதி திராவிடர் பிற்படுத்தப்பட்டோர் இந்திரா நகர் காலனி மக்களுக்கு கிராமப்புற தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூபாய் 2 - லட்சம் மதிப்பீட்டில் 5- பொது கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது இன்னும் தண்ணீர் இணைப்பு கொடுக்கவில்லை என அலட்சியமாக பதிலளிக்கின்றனர். ஆதிதிராவிட பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக அரசு பல நலத்திட்டங்கள் வழங்கியும் அது எங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. இதுபோன்று பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் அரசுக்கும் பயனில்லை எங்களுக்கும் பிரயோஜனம் இல்லை என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் தினமும் பயன்படுத்தும் அத்தியாவசியமான கழிவறைகளுக்கு இவ்வளவு காலதாமதமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி. மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பகுதியினை பார்வையிட்டு கழிவறைகளை திறந்து எங்களுக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென இந்திரா நகர் காலனி மக்கள் கோரிக்கை.
Next Story

