பட்டணம் பகுதியில் வெறி நாய் கடித்து குதறியதில் 8 ஆடுகள் பலி; விவசாயிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர் மதிவேந்தன்...

பட்டணம் பகுதியில் வெறி நாய் கடித்து குதறியதில் 8 ஆடுகள் பலி;  விவசாயிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர் மதிவேந்தன்...
X
பட்டணம் பகுதியில் வெறி நாய் கடித்து குதறியதில் 8 ஆடுகள் பலி; விவசாயிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர் மதிவேந்தன்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சி முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார், 45. இவர் தனது கொட்டகையில் 8 ஆடுகள்; 7 பசு மாடுகள் மற்றும் பசு கன்று குட்டி ஒன்று வளர்த்து வருகிறார். இவர், அருகே உள்ள பகுதியில் ஆடுகளை மேய்த்து மாலை நேரத்தில் ஆடு, மாடுகளை கொட்டகையில் அடைப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி அளவில் ஆடு மாடுகளை கொட்டகையில் அடைத்து அருகே உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். நள்ளிரவு அந்த கொட்டகைக்குள் புகுந்த வெறிபிடித்த தெருநாய்கள் அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இந்நிலையில், வழக்கம்போல் காலை கொட்டகையை பார்த்த போது, 8 ஆடு உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும், பசு கன்று குட்டி உடலில் காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தன. ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, கண்ணீர் விட்டு விவசாயி கதறி அழுதார். இதனை அறிந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், அவர்கள் நேரில் சென்று விவசாயி சிவக்குமாரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு அனைத்து உதவிகளும் செய்யும் என்றும் உறுதி அளித்தார். மேலும் இதற்கு உரிய இழப்பீடு பெற்று தருவதாகவும் அவர் தெரிவித்தார். இதில் பேரூர் கழக செயலாளர் பேரூர் துணை தலைவர் பொன். நல்லதம்பி மற்றும் கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story