சரக்கு வாகனம் மோதி 8 வயது ஆண் குழந்தை உட்பட 18 பேர் காயம்!
Pudukkottai King 24x7 |24 Aug 2024 4:34 AM GMT
விபத்து செய்திகள்
தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகே சரக்கு வாகனம் மோதி 8 வயது ஆண் குழந்தை உட்பட 18 பேர் காயம் - தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா, மஞ்சபேட்டை கிராமத்தைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்டோர், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த பாதயாத்திரையாக தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியதில் 8 வயது ஆண் குழந்தை மூன்று ஆண்கள் 14 பெண்கள் உட்பட 18 பேர் காயம் அடைந்தனர். இதனை அடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து காயம் அடைந்த 18 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த மாலா மற்றும் மகமாயி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதே பகுதியில் கடந்த மாதம் 17 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சமயபுரம் கோயிலுக்கு சென்ற போது சரக்கு வாகனம் மோதியதில் 5 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Next Story