சென்னையில் 8 இடங்களில் மின் திருட்டு: ரூ.9.40 லட்சம் வசூல்

X
இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்துக்கு உட்பட்ட சென்னை வடக்கு, சென்னை மையம், சென்னை தெற்கு, சென்னை மேற்கு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் சோழிங்கநல்லூர் கோட்டம் சென்னை தெற்கு-2 மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 9-ம் தேதி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் 8 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, மின் நுகர்வோருக்கு ரூ.9.01 லட்சம் இழப்பீட்டு தொகை விதிக்கப்பட்டது. அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து சமரசத் தொகை ரூ.39 ஆயிரம் செலுத்தியதால், காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மின் திருட்டு சம்பந்தமான புகார்கள், தகவல்களை சென்னை அமலாக்க செயற்பொறியாளரிடம் 94458 57591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
Next Story

