எடப்பாடி அருகே 80 வயது மூதாட்டியை பேத்தியின்  கணவர் கற்பழித்து வெட்டி கொலை

எடப்பாடி  அருகே 80 வயது மூதாட்டியை  பேத்தியின்  கணவர்  கற்பழித்து வெட்டி கொலை
எடப்பாடி அடுத்த ஆலச்சம்பாளையம் அருகே 80 வயது மூதாட்டியை மது போதையிலிருந்த அவரது பேத்தியின்  கணவர் விக்னேஷ் (22) கற்பழித்து அறிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் உடனடியாக விக்னேஷை எடப்பாடி போலீசாரால்  கைது செய்யப்பட்ட இச்சம்பகத்தால் பரபரப்பு..
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட ஆலச்சம்பாளையம் பகுதியில்  80 வயது மூதாட்டி வள்ளியம்மாள்என்பவர் தனியாக வசித்து வருகிறார்.. வள்ளியம்மாளுக்கு நான்கு மகளும் ஒரு மகனும் உள்ள இந்நிலையில் தனியாக வசித்து வந்த வீட்டில் நேற்று இரவு தலையில் பலத்த வெட்டு காயத்துடன் சடலமாக கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் எடப்பாடி காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எடப்பாடி போலீசார் வள்ளியம்மாளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தொடர்ந்து வள்ளியம்மாளின் கொலை சம்பவம் குறித்து எடப்பாடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.. இந்நிலையில் வள்ளியம்மாளின் மகள்  வழி பேத்தியின் கணவரான விக்னேஷ் (22) என்பவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் எடப்பாடி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது விக்னேஷ் விசைத்தறி கூலி தொழில் செய்து வருவதாகவும் செப்டம்பர் 19 இரவு 10 மணியளவில் மதுபோதையில் தனியாக வசித்து வந்த மூதாட்டி வள்ளியம்மாள் வீட்டிற்கு சென்று கற்பழித்து அறிவாளால் வெட்டி கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து விக்னேஷை கைது செய்த போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் பேத்தியின் கணவரே 80 வயது மூதாட்டியை கற்பழித்து அறிவாளால் வெட்டி கொலை செய்து உடனடியாக கைது செய்யப்பட்ட இச்சம்பவம் எடப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ...
Next Story