பரமத்தி வேலூரில் ரூ.83 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்.

பரமத்தி வேலூரில் ரூ.83 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்.
பரமத்தி வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று ரூ. 83 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்,செப்.04: பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 2 ஆயிரத்து 863 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.30.39-க்கும், குறைந்த பட்சமாக ரூ.25.29-க்கும், சராசரியாக ரூ.27.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.79 ஆயிரத்து 160-க்கு வர்த்தகம் நடைபெற்றது. நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‌ஏலத்திற்கு 2 ஆயிரத்து 755 -கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ‌ஒன்று ரூ.31.90-க்கும், குறைந்தபட்சமாக ரூ.24.00- க்கும், சராசரியாக ரூ.‌31.29-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 83 ஆயிரத்து 16- க்கும் ஏலம் நடைபெற்றது.
Next Story