காவல்துறை முகாமில் 84 மனுக்களுக்கு தீர்வு

தர்மபுரி காவல்துறை சார்பில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 84 மனுக்களுக்கு உடனடி தீர்வு
தர்மபுரி மாவட்டம் காவல்துறை சார்பில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.இதில் கூடுதல் போலீஸ் சூப்பர்ண்டுகள் ஸ்ரீதரன் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 84 மக்கள் பெறப்பட்டு அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும் நேற்று நடைபெற்ற முகாமில் 49 புதியதாக புகார் மனுக்கள் பெறப்பட்டு அவைகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு மேல் விசாரணைக்காக அனுப்பப்பட்டது மேலும் இந்த முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சிவராமன், கரிகால் பாரிசுங்கர், மனோகரன், மகாலட்சுமி, காவல் ஆய்வாளர்கள் வேலு தேவன், பார்த்திபன், புஷ்பராணி, அன்பழகன் காவல்துறை அலுவலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story