வெள்ளலூர் குப்பை கிடங்கில் 9 லட்சம் கன மீட்டர் கழிவு – மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தகவல்!

X
கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் சுமார் 9 லட்சத்து 29 ஆயிரம் கன மீட்டர் கழிவுகள் குவிந்து உள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தினசரி 1,100 டன் குப்பைகளில் சுமார் 990 டன் மட்டுமே பதப்படுத்தப்பட்டு, மீதிகள் முறையாக கையாளப்படவில்லை. மேலும், கோழி மற்றும் இறைச்சி கழிவு பதப்படுத்தும் மையம் மூடப்பட்டதால், 15 டன் கழிவுகள் மதுரை, கேரளா, கர்நாடகா பகுதிகளுக்கு தனியார் நிறுவனங்கள் வழியாக அனுப்பப்படுவதாகவும், ஆனால் பதிவுகள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆய்வில், சுத்திகரிப்பு திறன் போதாமை, தினசரி 110 டன் கலப்பு கழிவு திறந்த வெளியில் கொட்டப்படுதல், வடிகால் வசதி இல்லாமை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இயங்காத குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன. இதனால் சுகாதார பாதிப்புகள் ஏற்படுவதாக மக்களும் குற்றம் சாட்டி வரும் நிலையில், குறைபாடுகளை நீக்கி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
Next Story

