அரியலூர் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 941 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 4 கோடியே 80 லட்சத்து 60ஆயிரத்து 296க்கு தீர்வு

அரியலூர் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில்  941 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 4 கோடியே 80 லட்சத்து 60ஆயிரத்து 296க்கு தீர்வு
X
அரியலூர் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 941 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 4 கோடியே 80 லட்சத்து 60ஆயிரத்து 296க்கு தீர்வு காணப்பட்டது.
அரியலூர் . ஜூன்.14- தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு, வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், செந்துறை மற்றும் ஜெயங்கொண்டம் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஜூன் 14 ம் தேதி அன்று அரியலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மேற்படி தேசிய மக்கள் நீதிமன்றத்தினை அரியலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமாகிய மலர்வாலண்டினா துவக்கி வைத்து தலைமை வகித்தார். தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மணிமேகலை முன்னிலை வகித்தார். அரியலூர் முதன்மை சார்பு நீதிபதி ரைக்கானா பர்வீன், கூடுதல் மகளிர் நீதிமன்ற நடுவர் ஜெயப்ரதா ஒரு அமர்விலும், கூடுதல் சார்பு நீதிபதி ராஜா,கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி லாவண்யா இரண்டாவது அமர்விலும், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் .சங்கீதா சேகர் மற்றும் சுவப்னா ஆகியோர் குற்ற வழக்குகளுக்கான அமர்விலும் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் லதா, சிறப்பு சார்பு நீதிபதி ராஜா மகேஸ்வர், அனிதா கிறிஸ்டி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி.தனலெட்சுமி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணதாசன் மற்றும் நீதித்துறை நடுவர் 2. பாலா ஆகியோர் மக்கள் நீதிமன்ற அமர்வில் கலந்து கொண்டார்கள். வட்ட சட்டப் பணிகள் குழு செந்துறையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் வரதராஜன் மற்றும் வழக்கறிஞர் .காமராஜ் ஆகியோர் அமர்வில் கலந்து கொண்டார்கள். மொத்தம் 3,336 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டதில், 2 காசோலை வழக்கிற்கு ரூ.4 லட்சத்து 80 ஆயிரமும், 14 சிவில் வழக்குகளுக்கு ரூ. 1 கோடியே31 லட்சத்து93 ஆயிரத்து460 ம், 33 மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு ரூ.2 மோடியே76 லட்சத்து 22,ஆயிரமும், 515 சிறு குற்ற வழக்குகளுக்கு ரூ.8லட்சத்து71ஆயிரத்து தொளாயிரமும், 1 குடும்ப வன்முறை வழக்கும், மேலும் ஜெயங்கொண்டம் நிலம் கையகப்படுத்துதல் வழக்கில் 289 வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வழக்குகளில் வங்கி வழக்குகளுக்கான அமர்விற்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் உத்திராபதி, முத்துகிருஷ்ணன், மற்றும் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மேற்படி வங்கி வழக்குகளில் 87 வழக்குகள் சுமூகமாக பேசி முடிக்கப்பட்டு ரூ. 58லட்சத்து 92ஆயிரத்து936/- தீர்வு காணப்பட்டது. மொத்தமாக 941 வழக்குகளுக்கு ரூ.4,கோடியே 80லட்சத்து 60 ஆயிரத்து 296 மதிப்பில் தீர்வு காணப்பட்டது. மேற்படி தேசிய மக்கள் நீதிமன்றத்தினை அனைத்து ஏற்பாடுகளையும் அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் சார்பு நீதிபதி ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் ஊழியர்கள் செய்திருந்தார்கள். மேற்படி தேசிய மக்கள் நீதி மன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்
Next Story