குறிஞ்சிப் பாட்டில் கபிலர் பாடிய 99 பூக்கள் பெயரை கூறி

சாதனை படைத்த மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
பத்துப்பாட்டு எனும் சங்க நூல் தொகுப்பில் அடங்கியது குறிஞ்சிப் பாட்டு. கபிலர் என்னும் புலவர் பாடிய இந்தப் பாட்டில் 99 பூக்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இந்நிலையில், நாகை மாவட்டம் சிக்கலை அடுத்த அகரஒரத்தூர் ஊராட்சி வேர்க்குடியை சேர்ந்தவர் ராஜா. ரயில்வே ஊழியர். இவரது மனைவி பிரியா. இவர்களது மகள் மகிழினி (8). 2 -ம் வகுப்பு படித்து வருகிறார். கபிலர் குறிஞ்சிப்பாட்டில் கூறிய 99 குறிஞ்சி மலர்களின் பெயர்களையும் 37 வினாடிகளில் கூறி, ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை புரிந்துள்ளார். அவருக்கு, பாராட்டு சான்றிதழும், கேடயமும் வழங்கி அங்கீகரித்துள்ளது. இந்நிலையில், சாதனை புரிந்த மாணவியை, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் நேற்று பாராட்டினார். சாதனை புரிந்த மகிழினிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
Next Story