வளர்ப்பு நாயை துரத்திய சிறுத்தை CCTV காட்சி வெளியாகி பெரும்.பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது......

X
வளர்ப்பு நாயை துரத்திய சிறுத்தை CCTV காட்சி வெளியாகி பெரும்.பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது...... சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை ... நீலகிரி மாவட்டம் 65% சதவீதம் வனப்பகுதி கொண்ட மாவட்டமாகும் இங்கு மான் ,சிறுத்தை, கரடி, யானை, காட்டு எருமை போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் வசிக்கக்கூடிய மாவட்டமாகும் இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீர் தேடி சமீப காலமாக வனவிலங்குகள் வனத்தை விட்டு குடியிருப்பு பகுதிகளுக்கு வரதொடங்கியுள்ளன நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் வளர்ப்பு நாயை சிறுத்தை ஒன்று தொறத்தியுள்ளது இந்த காட்சியானது அங்கு ஒரு வீட்டில் பொறுத்தப்பட்டுள்ள CCTV கேமிராவில் பதிவாகியுள்ளது தற்பொழுது இந்த CCTV காட்சி இணையத்தில் வைரலாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது உடனடியாக வனத்துறையினர் சிறுத்தையின் நடமாடத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story

