தீப்பாஞ்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் - EPS

தீப்பாஞ்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் - EPS
சேலம் மாவட்டம் மடத்தூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ தீப்பாஞ்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி  பங்கேற்று சுவாமி தரிசனம்.
சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட மடத்தூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ தீப்பாஞ்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.  முன்னதாக கோவில் முன்பு அமைக்கப்பட்ட பிரமாண்டமான யாகசாலையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. காவிரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்களை யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து சிவாச்சாரியார்கள் எடுத்துக்கொண்டு கோவிலில் சுற்றி வந்து கோபுர கலசத்திற்கு  மகா கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை காட்டினர். தொடர்ந்து பக்தர்களின் மீது பூக்கள் மற்றும் தீர்த்தம் தெளிக்கப்பட்டு அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழக சட்டமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி உட்பட ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று அருள்மிகு ஸ்ரீ தீப்பாஞ்சியம்மன் சுவாமியை வழிப்பட்டு சென்றனர்.
Next Story