துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து K.R.N.இராஜேஸ்குமார் MP வாழ்த்து தெரிவித்தார்!
Namakkal King 24x7 |30 Sep 2024 1:31 PM GMT
உதயநிதி ஸ்டாலினை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான K.R.N.இராஜேஸ்குமார் MP நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
திராவிட மாடல் ஆட்சி நடத்தும் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின் , துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலினை அறிவித்ததுடன், புதிய அமைச்சர்கள் மற்றும் இலாகா மாற்றம் செய்யப்பட்ட அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றனர். இதில் தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். துணை முதலமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான K.R.N.இராஜேஸ்குமார் MP சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
Next Story