நாமக்கல் வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு! -K.R.N.இராஜேஸ்குமார் MP வேண்டுகோள்

நாமக்கல் வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு! -K.R.N.இராஜேஸ்குமார் MP வேண்டுகோள்
முத்தமிழஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிரம்மாண்ட வெண்கலச் சிலை திறப்பு விழா மற்றும் பொம்மைகுட்டைமேட்டில் 20,000 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கும் வருகை தருகின்ற கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களை சிறப்பாக வரவேற்பது என ஆலோசிக்கப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழக செயற்குழு கூட்டம் நாமக்கல் கிழக்கு மாவட்ட அலுவலகமான மோகனூர் சாலையில் உள்ள முல்லை நகர், கலைஞா் அறிவாலயம் இனமானப் பேராசிரியா் கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் சி.மணிமாறன் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் நாமக்கல் பெ.இராமலிங்கம் சேந்தமங்கலம் கே.பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கலந்து கொண்டு கூட்டப் பொருள் குறித்து விளக்கம் அளித்து பேசினார். அப்போது வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்து, நாமக்கல் பரமத்தி சாலை சிலம்ப கவுண்டர் பூங்கா அருகில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து,அதனைத் தொடர்ந்து நாமக்கல் சேலம் சாலையில் பொம்மைக்குட்டை மேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடையில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இவ்விரு நிகழ்ச்சிகளிலும் மாநில, மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள், அனைத்துப் பகுதி வார்டு கழக செயலாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும். கூட்டத்தில் நாமக்கல் மாநகராட்சி மேயர் து.கலாநிதி, மாநில, மாவட்ட நிர்வாகிகள் ராணி பெரியண்ணன், ஏ.கே.பாலச்சந்திரன், டாக்டர் மாயவன், பவுத்திரம் கண்ணன், விமலா சிவக்குமார், சுசிதரன், பூவராகவன், கண்ணன், அரசு வழக்கறிஞர் செல்வம், ஒன்றியக் கழகச் செயலாளர்கள் கே.பி.இராமசுவாமி, அ.அசோக்குமார், கே.பி.ஜெகநாதன், பி.பாலசுப்பிரமணியம், பெ.நவலடி, வி.கே.பழனிவேல், ஆர்.எம்.துரைசாமி, எம்.பி.கௌதம், செந்தில்முருகன், ஜெயபிரகாஷ், நகர கழக செயலாளர்கள் என்.ஆர்.சங்கர், எஸ்.பூபதி, ராணா ஆனந்த், அ.சிவக்குமார்,பேரூர் கழக செயலாளர்கள் சி.செல்லவேல், பொன்.நல்லதம்பி, பழனியாண்டி, கே.அன்பழகன்,ஜெயக்குமார், செல்வராஜ்,சுப்ரமணியம் ராஜேஷ், கே.கண்ணன், என்.தனபால், முருகேசன், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தரும் கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சிறப்பாக வரவேற்பது குறித்து, நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு 15.10.2024 அன்று நாமக்கல் மாநகரம், பரமத்தி சாலையில் உள்ள செலம்ப கவுண்டர் பூங்காவின் தென்மேற்குப் பகுதியில் முத்தமிழஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிரம்மாண்ட வெண்கலச் சிலை திறப்பு விழா மற்றும் பொம்மைகுட்டைமேட்டில் 20,000 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கும் வருகை தருகின்ற கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களை சிறப்பாக வரவேற்பது,நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் கணக்கு துவக்குவதெனவும், இந்த கணக்கை மாவட்டக் கழகச் செயலாளர், பொருளாளர் ஆகியோர் இயக்குவது, அதே நேரத்தில், மாவட்டக் கழகத்தில் செயலாளரோ அல்லது பொருளாளரோ மாற்றப்பட்டால், அதனை தக்க ஆதாரத்தோடு, அவ்வப்போது வங்கிக்கு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story