மாநகராட்சி மேயரை சந்தித்து நாமக்கல் MP மாதேஸ்வரன் வாழ்த்து!

நாமக்கல் மாநகராட்சியின் கழிவு நீர் கால்வாய் சீர்படுத்துவது மற்றும் நாமக்கல் மாநகராட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
நாமக்கல் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள து.கலாநிதியை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் VS.மாதேஸ்வரன் MP மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் நாமக்கல் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.மேலும் இந்நிகழ்வில் நாமக்கல் மாநகராட்சியின் கழிவு நீர் கால்வாய் சீர்படுத்துவது மற்றும் நாமக்கல் மாநகராட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.இந்த சந்திப்பில் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன்,பொருளாளர் மணி, துணை செயலாளர் செந்தில்ராஜா, மாமன்ற உறுப்பினர்கள் பழனிச்சாமி, மோகன், ஒன்றிய செயலாளர் சசிகுமார், மாவட்ட கவுன்சிலர் அருள்மணி ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story